சம்பிக்க இருக்கும் வரை, ஞானசாரவை கைது செய்வது கடினம்: மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டம்

🕔 May 25, 2017

நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியையும் பெற்றுள்ள இந்த அரசாங்கம், செப்டம்பரில் காலாவதியாகும் மாகாணசபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு அவசர கால சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதை தவிர, வேறு வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், கருத்து வெளியிட்டபோதே, இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“நாளுக்கு நாள் புகழ் இழந்து வரும் இந்த அரசாங்கம், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சாக்கு போக்கு சொல்லி பிற்போட்டு வருகிறது. ஆனால், செப்டம்பரில் காலவதியாகும் மூன்று மாகாண சபைகளையும் அரசாங்கம் கலைத்து தேர்தலை அறிவிக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளக் கூடியளவு உறுதியான நிலையில் இல்லை. மாகாணசபை அதிகாரத்தை நாம் கைப்பற்றி விடுவோமென, அரசா புலனாய்வுப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தினம் தினம் அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் இடம்பெறுகின்றன. இற்றை அடக்கவும், தேர்தலை பிற்போடவும் வேண்டுமென்றால், நாட்டில் அவசரகால சட்டம் வரவேண்டும். நாட்டியல் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளைப் பார்க்கும் போது, அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றமை தவிர்க்க முடியாமல் உள்ளது.

இந்த நாட்டில் யுத்தத்தை வெற்றிகொள்ள முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று நடப்பவை சிங்கள – முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வைகயில் அமைந்துள்ளன.

ஞானசாரவை கைது செய்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக அன்று கூறிய சம்பிக்க ரணவக்க போன்றவர்கள், இந்த அரசாங்கத்தில் இருக்கும் வரை, ஞானசார தேரருக்கு எதிராக, நீதியை நிலை நாட்டுவது கடினமானதாகும் என்றுதான் தோன்றுகிறது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்