அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில்

🕔 January 20, 2017

Thavam - 0144கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் தொடர்பாக எழுதிய பேஸ்புக் பதிவுக்குப் பதிலாக, ஒரு பதிவு நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. ருசைத் அஹமத் என்பவர் இதை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த புத்தகத்தை மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுதியதாக நம்பிக் கொண்டு, பசீரைத் தாக்கும் வகையில், தவம் எழுதியிருந்த பேஸ்புக் பதிவினை, ‘புதிது’ செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தவத்தினுடைய பதிவுக்குப் பதிலாக எழுதப்பட்டதையும் வெளியிடுகின்றோம்.

அனைத்துக் கருத்துக்களையும் படிக்கும் போதுதான், இது தொடர்பில் வாசகர்கள் ஒரு நேரிய முடிவுக்கு வர முடியும் என நாம் நம்புகிறோம்.

இது – தவத்தின் பதிவுக்குப் பதில் கொடுக்கும் வகையில் எழுதப்பட்டது. வாசியுங்கள்.

தாருஸ்ஸலாம் பற்றிய மர்மங்களுக்கு பதில் எழுதும் (மா)ஞானிக்கு… (பாகம் – 01)

ஞானியாரே;

எப்போது கூறினாலும் உண்மை உண்மைதான். பொய் பொய்தான். காலம் தாழ்த்தி கூறுவதனால் உண்மை பொய்யாகவோ அல்லது பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. குரு நாதரினால் அரசியல் அனாதையாக்கப்பட்ட போதுதான் இக்கட்சிக்குள் பிழைப்புத்தேடி நீர் அமைதியாய் புலம்பெயர்ந்தீர் என்பதை மறந்துவிட்டு கருத்துக் கூற முற்படாதே. நாங்கள் அதனை மறக்கவில்லை.

இப்போது உமக்கு தேசியத் தலைவராய் தெரியும் சரக்கு அன்று உனக்கு அரசியல் கோமாளியாகவும், எங்களது கட்சியும் சின்னமும் அன்று உனக்கு முஸீபத்தாகவும், எமது நோன்பு திறக்கும் நிகழ்வு உனக்கு அரசியல் நிகழ்வாகவும் – நீ அக்கரைப்பற்று கட்சியில் இருந்தபோது தோன்றியதுதானே.

அதனால்தானே நீ தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னால் நடுரோட்டில் டயர் எரித்து, நோன்பு திறக்கும் கஞ்சிப் பாணைக்குள் மண் அள்ளிப்போட்டு, எமது போராளிகளை வாள்கொண்டு வெட்டினாய்.

அக்கரைப்பற்று கட்சியில் அக்கரைப்பற்றின் தவிசாளராக நீ இருந்தபோது, இக்கட்சியும் அதன் போராட்டமும் உனக்கு நியாயமானதாக விளங்கவில்லை. அதாவுல்லா அரசனாக தெரிந்தார். மேயர் பதவி கிடைக்கவில்லை என்பதனாலும், இறுதி அபயம் எமது கட்சி என்பதனாலும்தானே – உனக்கு இன்று எமது கட்சியும் அதன் போராட்டமும் சரியாக படுகிறது.

அக்கரைப்பற்றின் மேயர் பதவியை அதாவுல்லா தந்திருந்தால், இன்றும் உனக்கு அதாவுல்லாதானே தலைவனாக இருந்திருப்பார். அப்படி இருந்திருந்தால், இன்று வெளிவந்துள்ள ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ புத்தகத்தை வைத்துக்கொண்டு றஊப் ஹக்கீமின் மானத்தை கப்பலேற்ற ஒரு ஆட்டம்போட்டிருப்பாயே. காலம் செய்த கோலம், மேயர் பதவி இல்லாததால் றஊப் ஹக்கீம் இன்று உமக்கு தலைவனாகி விட்டார்.

மேயர் பதவிக்கு தன்னைவர விடாமல் அதாவுல்லா தடுக்கிறார் என்று தெரிவதற்கு முன்னரே, அதாவுல்லாவோடு உறவாக இருந்து, அவரின் கட்சி தந்த பதவியில் இருந்தபோது, அதாவுல்லாவைப் பற்றி விமர்சித்தவரா நீர்? அல்லது அதாவுல்லாவின் கட்சியில் இருந்துகொண்டே முஸ்லீம் காங்கிரஸ்தான் முஸ்லீம்களின் விடுதலை இயக்கம் என்று பேசியவரா நீர்? அதாவுல்லாவோடு முரண்பட்டும்கூட, முஸ்லிம் காங்கிரஸில் இணையும்வரை, றஊப் ஹக்கீமை அல்லது எமது கட்சியை சரிகண்டவரா நீர்?

இவை எதுவும் இல்லையே. அப்படியிருக்க, தேசியப்பட்டியல் எம்பி கிடைக்காததால்தான் தவிசாளர் பேசுகிறார் என்று சொல்ல உமக்கென்ன அருகதையிருக்கிறது.

நீர், றஊப் ஹக்கீமை தலைவர் என்பது உண்மைபென்றால், தவிசாளர் தாருஸ்ஸலாம் பற்றிச் சொல்வதும் உண்மைதான்.

தன் தலைக்குள் அசிங்கத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை கூறும் நண்டின் நிலையொத்தது உமது கூற்று.

எதைப் பேசும் போதும் தன்னிலை அறிந்து பேச வேண்டும். நாம் விடும் அம்பு, தன்னை நோக்கித் திரும்புமா என்று பார்க்க வேண்டும். பட்டதாரி, இதுவெல்லாம் படிக்கவில்லையா? அல்லது போராளி என்றால் ஏமாளி என்று எண்ணிக்கொண்டீரா?

“ஹாபிஸ் நஸீரிடம் மாட்டிக்கொண்ட தாருஸ்ஸலாம் உங்களிடம் மாட்டியிருந்தால் எப்படி இருக்கும்?” என கேட்டிருக்கிறீர். ஆக மொத்தத்தில் தாருஸ்ஸலாம் ஹாபிஸ் நசீரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது அல்லது களவு போய் இருக்கிறது என, உமது வாயாலேயே ஒத்துக்கொண்டுவிட்டீர்.

“கட்சிக்குத் தெரியாமல் கள்ளத்தனமாக அமைச்சு எடுத்தல்” – இது என்ன புதுக்குற்றச்சாட்டு. உங்களது உயர்பீடத்தில் அது பற்றி கதைத்து, இறுதியில் அதற்கு றஊப் ஹக்கீமே வாழ்த்துத் தெரிவித்தாரே மறந்து விட்டதா?

கட்சியின் உறுப்பினர்களை கட்டுப்படுத்தத் தெரியாதவன் என்ன தலைவன்? சரி தெரியாமல் போய் அமைச்சு எடுத்திருந்தால், ஏன் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை?

றஊப் ஹக்கீம் அமைச்சு எடுத்த போதெல்லாம், உங்களது உயர் பீடத்திடம் ஆலோசித்துவிட்டா சென்று எடுத்தார். இந்த முறைகூட மூன்று அமைச்சுக்கள் அவரது விருப்பத்தேர்வுக்காக கொடுக்கப்பட்டதே… உங்களிடம் கேட்டுவிட்டா நீர் வழங்கல் அமைச்சை எடுத்தார்? கொமிசன் அதிகமாக கிடைக்கிற அமைச்சு என்றுதானே ஓடிப்போய் எடுத்தார். அந்த கொமிசன்தானே இன்று சமூகத்திற்காக எதையும் கதைக்காமல் அவரது வாயை கட்டிப்போட்டிருக்கிறது?

சமூகம் என்று வாய் கிழியக் கத்துற நீர் ஏன்டாப்பா இதல்லாம் கேக்கிறல்ல? ஓலுவில் பிரகடனம் செஞ்சலவா? அதுல கேட்ட எல்லாம் ஒங்களுக்கு கெடச்சிட்டா? கெடக்கல என்டா ஒங்கட தலைவர் வாயப்பொத்திக்கி இருக்கிற என்னன்டு கேக்கலயா? நீர் எப்பிடி வாப்பா கேப்பாய். அடிமதானே.

“யுனிட்டி பில்டர்ஸ்ல அப்படி என்ன சொத்திருக்கிறது” என்று கேட்டருக்கிறீர். ஆச்சரியமில்லைதான். ஆரம்பப்போராளிகளுக்கே தெரியாமல் கபளீகரம் செய்திருக்கிறான் என்றுதான் அந்தப்புத்தகமே வந்திருக்கிறது. நேற்று முந்தநாள் அரசியல் அகதியாய் இக்கட்சிக்குள் வந்த உமக்கு, அது தெரியாமல் இருப்பதில் ஒன்றும் அதிசயம் இல்லை.

தாருஸ்ஸலாம் உட்பட அனைத்து சொத்துக்களுக்கும் சொந்தமான நம்பிக்கை நிதியத்தின் பதிவை – கள்ளத்தனமாக அழித்துவிட்டு, கம்பனி பேரில் ஆதனவரி செலுத்தி வந்தால் என்ன அர்த்தம்? சொந்தக்காரனை துரத்திவிட்டு பராமரித்தவன் ஆட்சிபிடிக்கும் முயற்சி இல்லையா அது? தாருஸ்ஸலாம் காணி கட்டிடம் இப்போது அதன் பெறுமதி உமக்குத் தெரியாதா? எத்தனை கோடிகள் இருக்கும்? கள்ளத்தனமாக பக்கத்தில் வாங்கிய காணியை எழுதி எடுத்தது உமக்கு தெரியவில்லையா?

வெறும் அடிக்கல் நாட்டும் அரசியல் செய்யும் உமக்கு, மறைந்த மாமனிதர் உருவாக்கிய நிறுவனம் ஒன்றை ‘டம்மி பீஸ்’ என்று கூறி அந்த மாமனிதரை அவமானப்படுத்தும் உரிமையை யார் தந்தது?

அரசியல் அகதியே. உமது பதவி ஆசைக்காக யாரை வேண்டுமென்றாலும் நீர் திருப்திப்படுத்து. யாரை வேண்டுமென்றாலும் அவமானப்படுத்து. ஆனால், மறைந்த தலைவரை அவமானப்படுத்த நினையாதே. அழிந்து விடுவாய்.

ஆறுமாடி தாருஸ்ஸலாமை கவட்டுக்குள் மறைக்க முயலும் அக்கரைப்பற்று அரசியல் ஞானியே. 16 வருட கொள்ளையையும் களவையும் மறைத்து, முட்டாள் சாணக்கியத்தை காப்பதற்கு தம்பி சுகாதாரம் இருக்கிறார். நீர் சுகாதார அமைச்சராக வர நினைக்கும் கனவு பலிக்காது தம்பி. பலிக்காமலே போக பிராத்திக்கிறோம்.

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ நூல் உமக்கும் உமது சபை குழப்பி நண்பர்களான மன்சூர், பழீல், லாஹிர் ஆகியோருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதால், உங்களது ஆன்மாக்கள் சாந்தியடைந்திருக்கும் என்று நம்புகிறோம்.

அற்பமான அரசியல் ஆசைகளுக்காக, களவானிகளை நியாயப்படுத்தும் கேவலமான வேலை செய்யாதீர். விலைமாதரை வைத்துக்கொண்டு வியாபரம் நடத்துவதும் இதுவும் ஒன்றுதான். இந்த மாமா வேலைக்காக எமது மாமனிதரை அசிங்கப்படுத்தி நாளை மஹ்சரிலும் கைசேதப்பட வேண்டாம்.

உமது பாகங்கள் தொடர்ந்தால் எனது பாகங்களும் தொடரும்.

தொடர்பான செய்தி: அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

Comments

புதிது பேஸ்புக் பக்கம்