லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்
பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
கொலை இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை அவுஸ்ரேலியாவில் விசாரணையாளர்களிடம் வாக்கு மூலம் வழங்கியபோது தெரிவித்தார் என, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு, நேற்றைய தினம் கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் இடம்பெற்றது.