துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

🕔 July 3, 2016

Gun shot - 01மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை – திக்வெல்ல நாவரஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது, இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 48 வயதுடைய வில்சன் விக்கிரமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது ரதம்பல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்