Back to homepage

வெளிநாடு

காலமானார் கருணாநிதி

காலமானார் கருணாநிதி 0

🕔7.Aug 2018

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். 1924 ஜூன் 03ஆம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் அவர் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு 94 வயது. சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு,

மேலும்...
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி 0

🕔7.Aug 2018

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு 0

🕔6.Aug 2018

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஓகஸ்ட் மாதம், இதே நாளில்தான் உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குண்டு வீசப்பட்ட

மேலும்...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது 0

🕔5.Aug 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில்

மேலும்...
ஒசாமா மூளைச் சலவை செய்யப்பட்டார்: முதன் முதலாக அவரின் தயார் பேட்டி

ஒசாமா மூளைச் சலவை செய்யப்பட்டார்: முதன் முதலாக அவரின் தயார் பேட்டி 0

🕔3.Aug 2018

தனது மகன் மிகவும் நல்லவன் என்றும், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும்போக்காளராக அவர் மாறி விட்டார் எனவும், அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கானெம், முதன்முதலாக வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். செளதி அரேபியாவில் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கலாசாரக் குழு ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, பின்லேடன் வித்தியாசமான மனிதனாக

மேலும்...
புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு

புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2018

புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அமெரிக்க அதிகாரிகள்; வட கொரியாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம் மற்றும் அந்த செயற்பாடுகளை, உளவு செயற்கைகோள்கள் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இடத்தினுள் நடைபெற்று வரும் வேலைகள் எவ்வாறான கட்டத்தை

மேலும்...
இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி

இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி 0

🕔29.Jul 2018

இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதாக இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான் தெரிவித்துள்ளார். மேலும், “இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது. ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார்” என்றும் அவர் கூறியுள்ளார். தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு ரேஹம் கான் வழங்கிய பேட்டியிலேயே, இந்த

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார் 0

🕔29.Jul 2018

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என, இன்ரான்கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரமாகும். இந்த நிலையில், புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25

மேலும்...
செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட

மேலும்...
ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர் 0

🕔26.Jul 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார். இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா என்னும் இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடவுளாக வழிபடுவதோடு, தனது வீட்டிலுள்ள பூசை அறையிலும் ட்ரம்பின் படத்தை வைத்து வணங்கி வருகின்றார். ஒரு நாள் கூட

மேலும்...
பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி 0

🕔25.Jul 2018

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தற்கொலைக் குண்டுத்தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும்

மேலும்...
சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔24.Jul 2018

சிரியாவின் போர் விமானமொன்றினை – தனது வான் எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி 0

🕔21.Jul 2018

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக

மேலும்...
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு 0

🕔19.Jul 2018

பதின்நான்கு ஆயிரம் (14) ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த ரொட்டிகளுக்குள் வறுத்த மாமிசத்தை வைத்து முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும். இதுவே பழமையான சேன்விச்சாகவும்

மேலும்...
உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி 0

🕔8.Jul 2018

உகண்டாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றினைப் பயன்படுத்த வேண்டுமாயின் அங்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. செய்திப் பகிர்வு ‘அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘வெட்டிப் பேச்சை’, அந்த நாட்டு ஜனாதிபதி  யுவரி முஸவனி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினூடாக வம்புகள் வளர்வதாகவும், அதன் காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். குரல் மற்றும் செய்தி ‘அப்’களைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்