உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி

🕔 June 25, 2018

ஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் மிக் விமான கொள்வனவு மோசடியில் சம்பந்தப்பட்டார் எனக் குற்றம்சாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளைசெவ்வாய்கிழமை நாடவுள்ளதாக அறிய முடிகிறது.

உதயங்க கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரைவை பெறுவதற்கு குறிப்பிட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.

உதயங்க வீரதுங்கவின் சார்பில் தமது அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என நலின் நிசங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்