நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க

🕔 June 17, 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாமலாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ‘பல மண்டல’ கூட்டம் நேற்று சனிக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டையில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சிக்கு முரண்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்