நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்

🕔 February 6, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஏ.எல்.எம். நசீர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இருந்து, பின்னர் மாகாணசபை உறுப்பினராக தெரிவானார். அதன்பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவிவகித்தார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரமே இந்தப் பதவி ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்