தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது
– க. கிஷாந்தன் –
கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்டு சந்தேக பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.