மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம் 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மகனைக் காப்பாற்றுவதற்காக சட்டத்தினைச் துச்சமாக மதித்து செயற்பட்டுள்ளார் என்று கொழும்பு ரெலிகிரப் இணையத்தளம் விமர்சித்துள்ளது. ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன, அண்மையில் கிலிக் இரவுநேர களியாட்ட விடுதியில் தவறான செயலில் ஈடுபட்டதாகவும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியதோடு, விடுதியின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது.