உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் சம்பாதித்த இருவர் கைது

🕔 April 9, 2023

ண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 12, டேம் வீதியில் வைத்து மேற்படி இரண்டு நபர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்