ரணில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்: ஐ.தே.க தெரிவிப்பு

🕔 January 31, 2023

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமேசிங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்று, ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுத் தேர்தலில் ரணில் வெற்றி பெற்று, 2030 வரை ஜனாதிபதியாக தொடருவார் என்று தான் நம்புவதாகவும் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தா அல்லது கூட்டணியமைத்தா ரணில் போட்டியிடுவார் என்று கேட்கப்பட்டபோது, “ஜனாதிபதி தனது பங்காளிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார்” என்று அவர் கூறினார்.

அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ரணிலை ஆதரிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்