குடும்பத்துடன் அமெரிக்கா பறந்தார் கோட்டா

🕔 December 26, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டா மற்றும் அவரின் குடும்பத்தினர் இன்று காலை துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச, அவரின் மனைவி அயோமா ராஜபக்ஷ, அவருடைய மகன் மனோர் ராஜபக்ஷ, மருமகள் மற்றும் அவரின் பேரக்குழந்தையுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 2.55 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன் விமானத்தில் துபாய் வழியாக அவர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் மகன், அவரின் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.

அமெரிக்க பிராஜாவுரிமையைக் கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அதனை அவர் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் சுற்றுலா வீசாவிலேமே அமெரிக்கா சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்