கொழும்பு துறைமுக நகருக்கு தனியான வீசா வகைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

🕔 December 20, 2022

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்றவற்றின் நிமித்தம் வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு வீசா வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது குறித்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ‘முதலீட்டாளர் வீசா’, சேவை வழங்குநர்களுக்கான ‘சேவை வழங்குநர் வீசா’, கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ‘சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர் வீசா’ ஆகியவை துறைமுக நகருக்கென வழங்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்