உண்டியல் போன்ற சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ளவும்: பொலிஸார் எச்சரிக்கை

🕔 August 28, 2022

ண்டியல் முறைமை போன்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று – வெளிநாட்டுப் பணம் இலங்கைக்குகு அனுப்பப்படுவது குறைத்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் பல முறைசாரா பரிவர்த்தனை வழிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், இதுபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்