காலிமுகத் திடல் கடற்கரையில் இன்னுமொரு சடலம்

🕔 August 1, 2022

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பும், காலி முகத்திடல் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்தது.

அந்நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரென பின்னர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்