நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்: ‘கோட்டா கோ கம’ பகுதியில் தொடர்ந்தும் பதட்டம்

🕔 May 9, 2022

நாடு முழுவதுமான ஊரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பின் சில பகுதிகளுக்கும், பின்னர் மேல் மாகாணத்துக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அலறி மாளிகைக்கு முன்னால் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்பாளர்கள் மீதும், காலி முகத் திடலில் கோட்டா கோ கம பகுதியிலும் ராஜபக்ஷ ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் கோட்டா கோ கம பகுதியில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதோடு, அங்கு பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்