‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்: 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி

🕔 May 9, 2022

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ பகுதியில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் வன்முறையாளர்களை அடக்கும் முகமாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்தனர்.

இதேவேளை, குறித்த தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ள 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டமையினை அடுத்து, அந்த இடத்துக்கு ஜே.வி.பி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருான அனுர குமார திஸாநாயக்க வருகை தந்துள்ளார்.

இதற்கு முன்னதாக அலறி மாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’வில் இருந்த கூடாரங்களும் அரசாங்க ஆதரவாளர்களால் சேதமாக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டன.

அலறி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விட்டு வெளியேறியவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்