பிரதமர் பதவி விலகுகிறார்: அலறி மாளிகையில் வைத்து ஜகத் குமார எம்.பி தெரிவிப்பு

🕔 May 9, 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பை வெளியிட்ட பின்னர் அவர் பதவி விலகுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அலறி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டதாகக் கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்