தற்போதைய காலகட்டத்துக்கு தீர்வாகாது: அவசரகால நிலையை ரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
அவசரகாலச் நிலைமையை ரத்துச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலகட்டத்துக்கு அவசரகால நிலைமை தீர்வாகாது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கை ஒன்றினூடாக அந்தச் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்.
இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால நிலைமையைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, அவசரகால நிலை பிரகடனத்தை ரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.