பதவி விலகுமாறு கோட்டா கோரிக்கை: திங்கள் அறிக்கை விடுகிறார் மஹிந்த

🕔 May 7, 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதனையடுத்து, அது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்