விலகி விலகி விளையாடுதல்: பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் ராஜிநாமா

🕔 May 6, 2022

பிரதி சபாநாயகராக நேற்று (05) தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே பிரதி சபாநாயகராகப் பதவி வகித்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏப்ரல் 03ஆம் திகதி ராஜிநாமா செய்தார். ஆயினும் அவரின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து ஏப்ரல் 30ஆம் திகதி அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

இருந்த போதும் புதிய பிரதி சபாநாயகர் தெரிவின்போது, ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் நேற்று பிரேரிக்கப்பட்டு, அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவர் வெற்றிபெற்று புதிய பிரதி சபாநாயகராக தெரிவானார்.

இந்த நிலையிலேயே, அவர் மீண்டும் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்