ராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர ராஜிநாமா

🕔 May 6, 2022

ராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர இன்று (06) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதியிடம் ராஜிநாமா கடிதத்தைக் கையளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார்.

தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி அந்தத் தருணத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், எனினும் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக தன்னால் அமைச்சராக செயற்பட முடியாது என ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்