ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் அரச பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுவதென்ன?

🕔 May 6, 2022

ர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பை பயன்படுத்தி இவ்வாறானதொரு தகவல் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படுவதாகவும், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சுக்கு அவ்வாறான அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இன்று (06) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அரச நிறுவனங்களும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்