நாடாளுமன்றில் நடத்தப்படும் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டது: சாணக்கியன்

🕔 May 5, 2022

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றிய அவர்; நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

பிரதி சபாநாயகர் தெரிவுக்காக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போகும் ராஜபக்ஷக்களுடனேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாடாளுமன்றத்தில் எவ்வகையான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இங்குள்ள நாடகக்காரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் ஏனென்றால் அவர்களுக்கு ராஜபக்ஷக்களை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்