திட்டமிட்ட சதிகளால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளது: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

🕔 May 5, 2022

நாட்டில் பெற்ரோல் போதுமானளவு கையிருப்பில் உள்ள போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை காண முடிகின்றது.

நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்