நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க, சுயாதீன குழு நிபந்தன

🕔 May 4, 2022

ரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்காக 02 நிபந்தனைகளை முன்வைக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்த குழு நாடாளுமன்றில் இன்று (04) கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேறும் பட்சத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்க நடவடிக்கை எடுப்பதுடன் இடைக்கால அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி விருப்பத்தை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனைகளை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ளது.

தொடர்பான செய்தி: நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்