பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் நாளை விசேட உரை

🕔 May 3, 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (4) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை – தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் கூறப்படுகிறது.

நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் – தான் பதவி விலகப் போவதில்லையென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை நாடாளுமன்றத்தில் கூற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றிய பின்னர், பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்வார் என சில செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்