சிறுவர்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடுவதைக் காண முடிவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய சந்தர்ப்பம் உள்ளதால், அவர்களை அதிகளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வை கொப்புளங்கள் அதிகரிக்கலாம் எனவும் அதனால் இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிப்பாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.