கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய பணிகள் நிறுத்தம்

🕔 March 25, 2022

ரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தினமும் 05 – 06 மணித்தியாலங்கள் வரை இருளில் இருக்க வேண்டியுள்ளது.

டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்