நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

🕔 February 23, 2022

ரம்பக்கல்வியினை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அல் – ஹிக்மா பாலர் பாடசாலை கட்டிடம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் நெல்லித்தீவு பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாகவிருந்த நிரந்தர பாலர் பாடசாலை கட்டடத் தேவைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் இன்று (22) குறித்த பாலர் பாடசாலை கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இப்பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையினை கவனத்தில் கொண்டு, நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளூர் மேம்பாட்டு (Local Development Support Project- LDSP) திட்டத்தினூடாக, நிந்தவூர் பிரதேசத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதனை அடிப்படையாக கொண்டு முதற்கட்டமாக 68 லட்சம் ரூபாய் நிதி மூலம் இப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம். கமல் நெத்மினி, நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, கல்முனை கல்வி மாவட்ட செயற்திட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸஹீர், கல்முனை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். ஸாஜித், கல்முனை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம். றசீன், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எம். ஷரீபுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ. அஸ்பர், சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், எஸ்.எம். ஆதம்பாவா, ஏ.பி. அப்துல் வாஹிட், கே. சுதாமதி, எம்.ஐ.எஸ். பஸ்பிஹா, ஏ. அலிகான், கே.எம்.எம். ஜாரிஸ் மற்றும் எம்.ஐ.எப். றிஹானா உள்ளிட்டோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்