மொழிபெயர்ப்பாளராக ஊடகவியலாளர் கபூர் சத்தியப் பிரமாணம்

🕔 August 24, 2020

நிந்தவூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஏ.பி. அப்துல் கபூர் – சத்தியப் பிரமாணம் செய்த மொழி பெயர்ப்பாளராக (தமிழ் – ஆங்கிலம்) அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றின் நீதிபதி இஸ்மாயில் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக தனது தொழில் வான்மையினை வளர்த்துக்கொண்ட இவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் தனது பட்டக் கல்வியினை முடித்ததோடு, பட்ட மேற் கல்வி டிப்ளோமாவினை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்துள்ளார். 

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டமானிக் கற்கையின் மூன்றாம் வருட மாணவரான இவர் கல்வித்துறையில் ஓர் ஆங்கில ஆசிரியராக தனது தொழிலைஆரம்பித்து எழுத்து துறையில் தான் கொண்டிருந்த அதீத விருப்பின் காரணமாக ஊடகத்துறையிலும் கால்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக பணிக்காக  பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்களுக்காகப் பணியாற்றியும் வருகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்