ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல்
ஹிரு ஊடக நிறுவவனத்தின் இணையத்தளம் உள்ளிட்ட 05 இணையத்தளங்கள் மீது இன்று திங்கட்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டன.
தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையின் நினைவாகவே, இந்த சைபர் தாக்குதலை நடத்தியுள்ளதாக, சம்பந்தப்பட்டோர் – குறித்த இணையத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சில மணி நேரம் முடக்கப்பட்டிருந்த மேற்படி இணையத்தளங்கள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.