மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார்.
கொழும்பில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.