நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல்

🕔 November 17, 2019

னநாயகத்துக்கு மதிப்பளித்து, இழுபறிப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்வதற்கு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் இணக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, புதிய நாடளுமன்றத் தேர்தலான்றுக்கு செல்லவுள்ளதாக தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு தற்போது மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ‘புதிய நாடாளுமன்ற தேர்தல்’ ஒன்றுக்கு செல்ல தயார் என, இன்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி நாளை நடைபெறும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து அரசாங்கமாக இழுபறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கி உள்ளனர் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவரின் பேஸ்புக் பக்கத்திலேயே இந்த விடயங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்