அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல்

🕔 August 4, 2017

மைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு, தனது மனைவியையும் மகளையும் காட்டிக் கொடுத்துள்ளமை கவலைக்குரிய விடயம் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘ஹிரு’ தொலைகாட்சியின் ‘பலய’ எனும் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

அர்ஜுன் அலோசியசிடம் இருந்து ரவி கருணாநாயக்க லஞ்சம் பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக, ரவி கருணாநாயக்க தனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீது, பழியை போட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

உண்மையில் இது மிகவும் மோசமான செயற்பாடு. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, குடும்ப உறுப்பினர்களைக் காட்டிக் கொடுக்க அவர் முற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்