உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் 06 மனுக்கள்

🕔 October 28, 2022

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் – அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி, இதுவரையில் உச்ச நீதிமன்றில் 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய பிரஜைகளால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில், உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உள்ளடக்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தேச சட்டமூலத்தின் மூலம் ஒருவர் வரி செலுத்த வேண்டிய மாத வருமான வரம்பு 250,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்