கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல்

🕔 March 14, 2022

ட்டாரில் 03 லட்சம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டாருக்கு சென்றுள்ள இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ; சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்துள்ளார்.

இந்த நிலையிலேயெ கட்டாரில் 300,000 வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, வெளிநாட்டு வருவாயையும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க ஆகியோரும் விஜயம் செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்