பெற்றோல், டீசலின் விலைகளை லங்கா ஐஓசி தாறுமாறாக அதிகரித்தது
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதற்கிணங்க, பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றில் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க ஒரு லீட்டர் 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 254 ரூபா. ஒரு லீட்டர் டீசலின் விலை 214 ரூபாவாகும்
நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களில் எரிபொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்றாவது விலை அதிகரிப்பு இதுவாகும்.