கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த டொக்டர் ரபாய்தீன் மரணம்

🕔 September 16, 2021

ண்டி – கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த வைத்தியர் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டொக்டர் ரபாய்தீன் (வயது 61) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஓகஸ்ட் 18 ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் மூன்று வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்தார்.

மாவில்மடையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இவர், தற்போது கொவிட் பராமரிப்பு மையமாக இயங்கி வரும், கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் பணிபுரிந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்