கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது
களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போன்ற போலியான படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீது – தனிமைப்படுத்தல் மற்றும் கணணி குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.