முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல்

🕔 November 24, 2015

Anura kunara disanayaka - 012ழாம் வகுப்பு மாணவனின் புத்தகத்தை – முதலாம் ஆண்டு மாணவன் வாசித்ததைப் போன்று, வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் வாசித்திருந்தார் என்று, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கிண்டல் செய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வரவு – செலவுத்திட்டம் தொடர்பிலான 02 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து, சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

இதன்போது அநுரகுமார திஸாநாயக்க தவறான வழியில் நாடாளுமன்றில் செயற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பதில் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்