அரச நிறுவனங்களில் ஊழியர்களை கடமைக்கு அமர்த்துவது தொடர்பில், நாளை புதிய நடைமுறை
அரச நிறுவனங்கள் அனைத்திலும் குறைந்தளவான ஊழியர்களுடன், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச்செல்ல அந்நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை அறிவித்தல்
இதன்போது, கர்ப்பிணிகளாகவுள்ள ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று நாளை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.