முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு

🕔 January 6, 2021

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப், இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

லங்கா சதொசவுக்குச் சொந்தமான வாகனங்களை 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முறைகேடாக பயன்படுத்தியமை குற்றச்சாட்டில், கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இவர் கிண்ணியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்