இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு

🕔 December 8, 2020

ன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.

நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக மேற்படி ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் தொடக்கம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சூழலுக்கு மிகவும் நட்புறவான திட்டமான இதன் மொத்த பெறுமதி 135 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஒரு வருடத்துக்கும் குறைவான காலப்பகுதியில் இந்த மின் ஆலையின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 08 ரூபாய் என்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்துக்கொள்ள முடியும் என திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு அதிகாரி வேலு சந்ரேஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்