புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம்

🕔 December 3, 2020

புரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் 170 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

புரெவி சூறாவளி நேற்று நாட்டில் நுழைந்தமையினை அடுத்து ஏற்பட்ட நிலைமை தொடர்பாக, அவர் இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயங்களை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்