போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கை

🕔 October 31, 2020

– க. கிஷாந்தன்

கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் வழிகாட்டலில் இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இந்த பணிகள் இன்று காலை அட்டன் பிரதான பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தொற்று நீக்கும் நடவடிக்கையின்போது, ஹட்டனில் இருந்து சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்