10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது

🕔 September 8, 2020

ற்பிட்டி பிரதேசத்தில் 10 கிலோ கிராம் தங்கம், அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை காலை தலவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது.

கறுப்பு நிறத்திலான வாகனத்தில் மிகவும் நுட்பமான முறையில் ஆசனத்திற்கு கீழ் மறைக்கப்பட்ட நிலையில் இந்த தங்கம் அதிகாலை 03 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கத்துடன் 34 வயதுடைய புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்