ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது

🕔 August 30, 2020

சி கேஷ் (Easy Cash) ஊடாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் பலாங்கொட பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தபோது, ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் இளைஞன் என்பது தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய நபர் ஒருவரையும் சூட்சுமமான முறையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டாவதாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த கார், நான்கு வங்கி அட்டைகள் மற்றும் நான்கு கைத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்