விடுபட்டுள்ள கற்கை நெறிகளை பாடசாலைகளில் பூர்த்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்: கல்வி அமைச்சு அறிவித்தல்

🕔 June 23, 2020

திர்வரும் சில மாதங்களில், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ராநந்த கூறியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த நிகழ்வுகள் உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பங்குபற்றக்கூடிய உடற்பயிற்சி செயற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்